search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடுமலை மலைவாழ் மக்கள்"

    • கிராம பஞ்சாயத்துதாரர்கள் காதலர்கள் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருவீட்டார்களின் சம்மதம் பெற்றனர்.
    • சின்னான், தனலட்சுமி திருமணம் உற்றார் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் புடை சூழ நடைபெற்றது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லையில் சுமார் 3000 அடிக்கு மேலே அடர்ந்த வனப்பகுதியில் மாவடப்பு செட்டில்மெண்ட் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த மலை கிராமத்தை சேர்ந்த சின்னான் - தனலட்சுமி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவர்கள் திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து காதலர்கள் தங்களது காதல் குறித்தும் பெற்றோர் எதிர்ப்பு பற்றியும் கிராம பஞ்சாயத்தார்களிடம் முறையிட்டு, தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கிராம பஞ்சாயத்துதாரர்கள் காதலர்கள் குடும்பத்தனரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருவீட்டார்களின் சம்மதம் பெற்றனர். பின்னர் சின்னான், தனலட்சுமி திருமணம் உற்றார் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் புடை சூழ நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கிராம மக்கள் மற்றும் உறவினர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து பழங்குடியினர் முறைப்படி பாட்டு, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலாளரும், தளி பேரூராட்சி துணை தலைவருமான செல்வன், வன உரிமை குழு தலைவர்கள் முருகன், குப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • மலைவாழ் கிராமங்களில் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • வீடுகளுக்கு சிமென்ட் தளம்அமைத்துத்தர மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை,அமராவதி வனச்சரகங்களுக்கு உட்பட்ட ஈசல் திட்டு, திருமூர்த்திமலை, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, காட்டுபட்டி, பெருமாள் மலை, பொருப்பாறு, கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களில் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    அங்குள்ள மக்களுக்குஅடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு, மருத்துவம் உள்ளிட்ட எந்தவசதிகளும் செய்து தரப்படவில்லை. ஆனை மலை புலிகள் காப்பகத்தின் கீழ் இப்பகுதிகள் உள்ளதால் எவ்வித மேம்பாட்டுத் திட்டங்களும் அனுமதிக்கப் படுவதில்லை. மண் பூசப்பட்ட சுற்றுச்சுவரும், தகரக் கூரை வேயப்பட்ட மேற்கூரையும், மண் தரை கொண்ட குடிசை வீடுகளில்தான் இம்மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இது குறித்து காட்டுப்பட்டி மலைவாழ் மக்கள் கூறியதாவது: - கான்கிரீட் வீடுகளோ, செங்கல் அல்லது ஹாலோபிளாக் கற்களை கொண்ட சுற்றுச் சுவரோ எங்கள் வீடுகளுக்கு இல்லை. ஓலையால் வேயப்பட்ட குடிசைகளிலும், தகரம் பொருத்தப்பட்ட குடிசைகளிலும் மட்டுமே வசித்து வருகிறோம். மழை, வெயில் காலங்களில் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். மழைக்காலங்களில் கூரைகளும், தகரங்களும் காற்றில் பறந்து விடுகின்றன.

    மண் தரையாக இருப்பதால் எலிகள் எளிதாக வீடுகளுக்குள் ஊடுருவி விடுகின்றன. அவற்றை பிடிக்க பாம்புகளும் படையெடுக்கின்றன. கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்ற அதீத விஷம் கொண்ட பாம்புகள் வீடுகளுக்குள் புகுவதால் அச்சத்துடனேயே வாழ வேண்டியுள்ளது.

    எனவே வீடுகளுக்கு சிமென்ட் தளம்அமைத்துத்தர மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கைஎடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×