search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் நிலை சரியில்லை"

    • உடல் நிலை சரியில்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த மேல்வேலம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ரமேஷ்(23) லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் ரமேஷ் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வயிற்று வலி வந்துள்ளது. வலி தாங்க முடியாமல் ரமேஷ் வீட்டில் உள்ள பேனில் வேட்டியை கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரானை நடத்தி வருகின்றனர்.

    ×