search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடன்படிக்கை"

    • தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினர்
    • வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர்:

    வெள்ளகோவில் வட்டார விசைத்தறி உரிமையாளர் சங்கத்திற்கும், வெள்ளகோவில் அடைப்புத்தறி உரிமையாளர்கள் சங்கத்திற்கும், வீரசோழபுரம் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்திற்கும் மற்றும் வெள்ளகோவில் தி.மு.க. விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்கம், இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற் சங்கத்திற்கும் இடையே போனஸ் ஒப்பந்த உடன்படிக்கை கூட்டம் காங்கயத்தில் உள்ள பயணியர் மாளிகையில் நடைபெற்றது.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினர். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருப்பூர் 4-ம் மண்டல தலைவருமான இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்தகூட்டத்தில் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களிடமிருந்து தறி ஓட்டுபவர், பாவு ஓட்டுபவர், நூல் சுற்றுப்பவர், பாவு பிணைப்பவர், மேஸ்திரி, தார் போடுபவர் என இத்தொழில்களில் பிரிவு வாரியாக ஒரு வருடத்திற்கு என்ற வீதமும், மாதம் ஒன்று என்ற வீதமும் கணக்கிட்டு போனஸ் தொகை வழங்க அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    தறி ஓட்டுபவர், பாவு ஓட்டுபவர்களுக்கு வருடத்திற்கு ரூ.1450, நூல் சுற்றுபவருக்கு ரூ.900, ஒன்றுக்கு மேற்பட்ட பட்டறையில் பாவு ஓட்டுபவர்களுக்கு ரூ.500, பாவுபினைப்போருக்கு ரூ.220, மேஸ்திரிக்கு ரூ.220, தார் போடுவதற்கு ரூ.320, நூல் காயப்போடுபவர், தார் எடுப்பவர், பீஸ் மடிப்பவர்களுக்கு ரூ.320 என்ற கணக்கில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சுமார் ரூ.1.50 கோடி போனஸ் வழங்கப்பட உள்ளது.

    கூட்டத்தில் வெள்ளகோவில் நகர மன்ற தலைவர் கனியரசி முத்துக்குமார், வெள்ளகோவில் வட்டார விசைத்தறிவு உரிமையாளர் சங்க தலைவர் எம்.எஸ்.மோகன செல்வம், வெள்ளகோவில் அடைப்புத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.எம்.சி.செல்வராஜ், வீரசோழபுரம் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுச்சாமி, வெள்ளகோவில் தி.மு.க. விசைத்தறி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் வி.வி.தம்பிதுரை, செயலாளர் சதாசிவம், இந்திய தேசிய தொழிற்சங்க தலைவர் பாலு, செயலாளர் அசோக் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், விசைத்தறி உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ×