என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உசிலம்பட்டி மாணவர் பலி
நீங்கள் தேடியது "உசிலம்பட்டி மாணவர் பலி"
உசிலம்பட்டி அருகே பள்ளி வளாகத்தில் விளையாடிய போது ஜன்னல் சுவர் இடிந்து விழுந்து மாணவர் பரிதாபமாக இறந்தார்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது கீரிப்பட்டி கிராமம். இங்கு அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது. அந்தப்பள்ளியில் அதே ஊரைச்சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ராகவன் (வயது 12) 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ராகவன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் மேல் பகுதியில் உள்ள சுவர் இடிந்து ராகவன் மீது விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த ராகவனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராகவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X