search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன் ரஷ்யா தாக்குதல்"

    • உக்ரைனில் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தினர்.
    • போர் களத்தில் மீண்டும் தாக்குதல் அதிகரித்து இருக்கிறது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தொடக்கத்தில் உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.

    சில மாதங்களுக்கு பிறகு கிழக்கு உக்ரைன் பகுதிகளை குறிவைத்து கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட சில நகரங்களில் தாக்குதல்களை ரஷியா குறைத்தது.

    இதற்கிடையே ரஷியாவின் கிரிமியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ரஷியா ஆவேச தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைன் தலைநகர் கிவ்வில் ஒரே நாளில் 84 ஏவுகணைகள் வீசப்பட்டன.

    நேற்று உக்ரைனில் 40க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தினர். இதனால் போர் களத்தில் மீண்டும் தாக்குதல் அதிகரித்து இருக்கிறது.

    இந்தநிலையில் ரஷியாவின் ஆயுத கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    உக்ரைன்-ரஷியா எல்லைப் பகுதியான பெல் கோரட் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷியாவின் வெடி மருந்து கிடங்கு ஒன்று உள்ளது. இந்த ஆயுத கிடங்கு மீது உக்ரைன் படையினர் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயுத கிடங்கு முற்றிலும் சேதமடைந்தது.

    இதுகுறித்து பெல்கோரப் பிராந்தியத்தின் கவர்னர் வியாசெஸ்லாங் கிளாட் சோவ் கூறும் போது, பெல்கோரட் மாவட்டத்தில் உள்ள வெடி மருந்து கிடங்கு உக்ரைன் படையின் தாக்கு தலில் வெடித்து சிதறியது. அப்பகுதியில் இருந்த மக்கள் பாது காப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்றார்.

    • இன்று அதிகாலை கிவ் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
    • கிரீபியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக கிவ் நகரில் ஆவேச தாக்குதல் நடத்தப்பட்டது.

    உக்ரைன் தலைநகர் கிவ்வில் கடந்த 10-ந் தேதி ரஷிய படைகள் ஒரே நாளில் 84 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14 பேர் பலியானார்கள். ரஷியாவின் வசமுள்ள கிரீபியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக கிவ் நகரில் ஆவேச தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் கிவ் நகரில் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.

    இன்று அதிகாலை கிவ் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தாக்குதல் எச்சரிக்கைக்கான சைரன் ஒலி எழுப்பப்பட்டது. உடனே மக்கள் பாதுகாப்பு இடங்களில் தஞ்சம் அடைந்தனர். தாக்குதல் நடந்த இடங்களுக்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.

    இதுகுறித்து கிவ் பிராந்திய கவர்னர் ஒலெக்சி குலேபா கூறும்போது, "தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடந்தது" என்றார். தாக்குதல் நடத்திய டிரோன்கள் ஈரான் தயாரித்த காமிகேஸ் டிரோன்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிவ்வில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கி இருந்த நிலையில் மீண்டும் தாக்குதலை நடத்தி உள்ளன.
    • உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியா தன்னுடன் இணைத்து கொண்டது தொடர்பாக ஐ.நா. சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் சரமாரியாக ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    கிவ்வில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கி இருந்த நிலையில் மீண்டும் தாக்குதலை நடத்தி உள்ளன.

    ரஷியாவின் கிரீமியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் உக்ரைன் தலைநகரில் ஆவேச தாக்குதலை நடத்தியது. கிவ் நகரை நோக்கி ஒரே நாளில் 84 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 14 பேர் பலியானார் கள். 97 பேர் காயம் அடைந்தனர்.

    கிவ் நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து ஐ.நா. சபை அவசரமாக கூடியது. போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியா தன்னுடன் இணைத்து கொண்டது தொடர்பாக ஐ.நா. சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதில் உக்ரைன் தூதர் செர்ஜி பேசும்போது, ரஷியாவை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறும்போது, "வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் பொதுமக்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்துவதன் மூலம் அல்லது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை நோக்கி தாக்குதல் நடத்துவதன் மூலம் ரஷியா, தான் ஒரு பயங்கரவாத நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதை வலுவான வழிகளில் தடுக்கப்பட வேண்டும்" என்றார்.

    • ரஷியாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடித்தது.
    • கிரீமியா பாலத்தில் குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தநிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள ஜபோரி ஜியா நகரில் ரஷிய படைகள் 7 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதிகாலையில் வீசப்பட்ட இந்த ஏவுகணைகள் நகர மையப் பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது.

    இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கிய சாலையில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் தரை மட்டமானதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே கார்கீவ் பிராந்தியததில் ரஷிய படைகள் கைப்பற்றிய குப்யான்ஸ்க் நகரை மீட்டு உக்ரைன் ராணுவம் முயன்ற போது ரஷியாவின் தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 220 பேர் கொல்லப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ரஷியா ராணுவம் கூறும்போது, குப்யான்ஸ்க் நகரை கைப்பற்ற வந்த உக்ரைன் ராணுவத்தின் அனைத்து தாக்குதல்களும் ரஷிய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டன. இதில் உக்ரைனின் 220 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது. ஆனால் 220 வீரர்கள் பலியானதை உக்ரைன் உறுதிப்படுத்தவில்லை.

    2019-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. இதற்கிடையே ரஷியாவுடன் கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடித்தது.

    பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    இந்த நிலையில் கிரீமியா பாலத்தில் குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷியா-கிரீமியா இடையே உள்ள கியாஸ் குழாய் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் பலப்படுத்த புதின் அறிவுறுத்தி உள்ளார்.

    ×