search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈ.பி.எஸ்."

    • ஓ.பி.எஸ்.உடன் தொண்டரணி உள்ளது; ஈ.பி.எஸ்.உடன் டெண்டர் அணி உள்ளது-முன்னாள் எம்.பி
    • அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன்கூட உயர் பதவிக்கு வருவான்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரத்தில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட (ஓ.பி.எஸ். அணி) சார்பில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்-முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன் எம்.எல்.ஏ., மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், மாநகர் அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையமாரித்துரை, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய ஐயப்பன் எம்.எல்.ஏ., தமிழக தேர்தல் ஆணையம் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.-ஐ தான் அ.தி.மு.க.வாக அங்கீகரித்துள்ளது. தொண்டர்கள் ஓ.பி.எஸ். பின்னால்தான் உள்ளார்கள் என்றார்.

    மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கோபாலகிருஷ்ணன் பேசிய தாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ்.உடன் தொண்டர் அணி உள்ளது. இ.பி.எஸ்.உடன் டெண்டர் அணி உள்ளது. அ.தி.மு.க. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் ராணுவ கட்டுப்பாட்டுடன் வளர்ந்த இயக்கம். இந்த இயக்கத்தை தனது சுயநலத்திற்காக அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.

    அ.தி.மு.க.வுக்கு விசுவாசத்துடன் ஓ.பி.எஸ். இருக்கிறார். கூவாத்தூரில் தங்கம் தருகிறோம், பணம் தருகிறோம் என்று பேரம் பேசி அவர்கள் அணிக்கு என்னை அழைத்தபோது நான் தங்கம் வேண்டாம் தங்கமகன் ஓ.பி.எஸ். உடன் இருப்பதே மேல் என்று கருதி இருந்தேன். இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறேன்.

    அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன்கூட உயர் பதவிக்கு வருவான். பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர். வழிவகுத்து கொடுத்திக்கிறார். ஆனால் இன்று சிலர் தனது சுயநலத்திற்காக 10 மாவட்ட செயலாளர்கள் சொன்னதால் இடைக்கால பொதுச்செயலாளர் என்று தம்பட்டம் அடித்து வருகிறார்கள். அது ஒருபோதும் செல்லாது. அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பி.எஸ். பின்னால்தான் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் வேலுச்சாமி, பி.எஸ்.கண்ணன், ஒத்தக்கடை பாண்டியன், உசிலை பிரபு, கொம்பையா பாண்டியன், ஆட்டோ கருப்பையா,முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன், கமலக்கண்ணன், வெள்ளூர் கார்த்திகேயன், பவுண்டு ராஜ், கணேசத்தேவர், ராதா, முத்து, கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×