search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்கள் கைது"

    • அழகு நிலையத்தில் ‘செக்ஸ் மசாஜ்’ நடப்பதாக வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • தலைமறைவான அழகு நிலைய உரிமையாளரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வளசரவாக்கம், கிருஷ்ணா நகர் காமராஜ் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் 'செக்ஸ் மசாஜ்' நடப்பதாக வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள அறையில் வாடிக்கையாளர்கள் சிலர் இளம்பெண்ணிடம் 'செக்ஸ் மசாஜ்' செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து செக்ஸ் மசாஜில் ஈடுபட்டு வந்த இளம்பெண்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அழகு நிலையம் என்கிற பெயரில் 'செக்ஸ் மசாஜ்' நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக தலைமறைவான அழகு நிலைய உரிமையாளரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×