search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளநிலை பட்டப்படிப்பு"

    • மூத்த விஞ்ஞானி வெங்கடேஷ்வ ன் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
    • கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட னர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான்கடை புனித சவேரி யார் கத்ேதாலிக்க பொறியி யல் கல்லூரியில் 26-வது ஆண்டு இளநிலை பட்டப்ப டிப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. குழித்துறை மறை மாவட்ட தொடர்பா ளரும், கல்லூரி யின் ஆட்சிமன்றகுழு தலைவரு மான யேசுரெத்தி னம் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் மரிய வில்லியம் வரவேற்றார். கல்லூரி முதல்வர், கல்லூரியின் சிறப்பம்சங்களை பட்டியலிட்டார்.

    இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை யின் விக்யான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி வெங்கடேஷ்வ ன் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.

    கல்லூரியின் முன்னாள் மாணவரும் துபாய் நாட்டின் லக்ரேம் வர்த்தக நிறுவனங்களின் துணை தலைவரு மான டாக்டர் கெவின் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    விழாவில் கல்லூரியின் முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜட்சன், நிதிகாப்பா ளர் பிரான்சிஸ் சேவியர், துணை முதல்வர் பேராசிரி யர் கிறிஸ்டஸ் ஜெயசிங், புனித சவேரியார் தாதியர் கல்லூரி தாளாளர் ஜெயபி ரகாஸ், மாணிங்ஸ்டார் தொழில்நுட்ப கல்லூரி தாளாளர் பிரிமஸ்சிங், கல்லூரி முதல்வர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட னர்.

    ×