என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இலங்கை வாலிபர் கைது"
- இலங்கையை சேர்ந்தவர் ஜாய் (வயது 35). இவர் ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் இருந்த அவர் 19 வயதில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
- வெளிநாட்டவர்கள் குற்றம் செய்தால் தங்கவைக்கும் சென்னை புழல் சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
நெல்லை:
இலங்கையை சேர்ந்தவர் ஜாய் (வயது 35). இவர் ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் இருந்த அவர் 19 வயதில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவர் தற்போது பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்து வருகிறார்.
இந்தநிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்த அவர் இலங்கையில் உள்ள தனது பெற்றோரை சந்திப்பதற்காக இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். இதுதொடர்பாக மனு அளித்துவிட்டு வெளியே வந்தார்.
அப்போது அவர் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் உள்ள புறக்காவல் நிலைய கண்ணாடி ஜன்னலில் தலையால் முட்டி உடைத்தார். பின்னர் கண்ணாடி துண்டை எடுத்து கையை கிழித்துக் கொண்டு, கழுத்தை அறுக்க முயன்றார். அவரை போலீசார் பிடித்து பாளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அறையின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது, போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தது, தற்கொலைக்கு முயற்சி செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து இன்று காலை அவரை வெளிநாட்டவர்கள் குற்றம் செய்தால் தங்கவைக்கும் சென்னை புழல் சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்