search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்கத்தில் மாற்றம்"

    • மகுடி -சிர்புர் டவுன் - காகஸ்நகர் பிரிவு இடையே புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்குகிறது.
    • ெரயில் ஆகிய 5 ெரயில்கள் தெலுங்கானா மாநிலம், சிர்பூர் காகஸ்நகர் நிலையத்தில் நிற்காது

    திருப்பூர்,செப்.20-

    செகந்திராபாத் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட, மகுடி -சிர்புர் டவுன் - காகஸ்நகர் பிரிவு இடையே புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்குகிறது. இதனால் அவ்வழியாக பயணிக்கும் ெரயில்கள் வழித்தடம், இயக்கம், நின்று செல்லும் நிலையங்கள் குறைக்க ப்பட்டுள்ளது. வருகிற 25-ந்தேதி பிலாஸ்பூர் - எர்ணாகுளம் வாராந்திர ெரயில் (எண்: 22815) மஜ்ரி ஜங்ஷன் - பெட்டபல்லி ஜங்ஷன் வழியாக மாற்று வழியில் இயக்கப்படும். வழக்கமான வழித்தடமான சந்திராபூர், பால்ஹர்ஷஹ் ஜங்ஷன், சிர்பூர் காகஸ்நகர் நிலையங்களுக்கு செல்லாது.

    இதே நாளில் கொச்சுவேலி - கோர்பா (எண்:22648) ரெயில், அட்டவணையில் உள்ள வழித்தடமான கம்மம், வாரங்கல், ராமகுண்டம், பெலம்பல்லி, டுர்க் ஜங்ஷன் வரை 10 நிலையங்களுக்கு செல்லாது. விஜயவாடா - பிலாஸ்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும்.

    நாளை 21, 22 மற்றும் 24-ந்தேதி, கோரக்பூர் - கொச்சுவேலி ெரயில் (எண்:12511) இன்று 20 மற்றும் 23ந்தேதி கோர்பா - கொச்சுவேலி ெரயில் (எண்: 22647), 21ந்தேதி, கொச்சுவேலி - கோர்பா (எண்:22648), 22ந் தேதி எர்ணாகுளம் - பரூனி (எண்:12522), இதே நாளில் கோவையில் இருந்து புறப்படும் ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:12969) ெரயில் ஆகிய 5 ெரயில்கள் தெலுங்கானா மாநிலம், சிர்பூர் காகஸ்நகர் நிலையத்தில் நிற்காது என தெற்கு ெரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×