search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா இலங்கை உறவு"

    • இலங்கை இந்தியா இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
    • அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணம் குறித்து இலங்கை வெளியுறவு மந்திரி விரிவாக பேசினார்.

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளதார நெருக்கடியின்போது இந்தியா பல்வேறு வகைகளில் அந்த நாட்டுக்கு உதவியது. நிதி உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதோடு, இலங்கைக்கு சர்வதேச நிதியம் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் இந்தியா செய்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு இலங்கை அதிபராக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக கடந்த 20-ந் தேதி இந்தியா வந்தார்.

    இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அலி சப்ரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணம் குறித்து விரிவாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இரு நாடுகளுக்கும் இடையே துறைமுக இணைப்பின் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அடுத்தகட்டத்தை அடைய, எங்களுக்கு முதலீடுகள் தேவை. இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வழிகளை நாங்கள் விவாதித்தோம். இரு அரசாங்கங்களுக்கு இடையில் மட்டுமன்றி தனியார் துறைகளுக்கு இடையிலான உறவும் வலியுறுத்தப்பட்டன

    தென்னிந்திய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியில் இலங்கைக்கு நன்மையளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உதவும் வகையில் இந்திய பல்கலைக்கழகத்தை இணைத்துக்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. டாலர், யூரோ மற்றும் யென் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது போல் இந்திய ரூபாயை பொது பணமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

    இந்திய ரூபாயின் நேரடி பயன்பாட்டை அனுமதிப்பது, இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு பல நாணய மாற்றங்களின் தேவையைத் தடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • யாழ்ப்பாணம் சென்றடைந்த எல்.முருகனுக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர்.
    • யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் உள்ள டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    மத்திய இணை மந்திரி எல்.முருகன் 4 நாள் பயணமாக இன்று இலங்கை புறப்பட்டு சென்றார். யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சென்றுள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், இலங்கை பயணத்தின்போது தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சனை குறித்து பேசப்படும் என தெரிவித்தார்.

    இலங்கை யாழ்ப்பாணம் சென்றடைந்த எல்.முருகனுக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை எல்.முருகன் சந்தித்து பேசினார். யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் உள்ள டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இந்தியா-இலங்கை நட்புறவின் இரண்டு முக்கிய தூண்களாக கருதப்படும் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக வட இலங்கையில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்துவதற்கும், பிராந்திய கடல்சார் மையமாக மாற்றுவதற்கான நாட்டின் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியா 2018 ஆம் ஆண்டில், 45.27 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை வழங்கியது. அந்த துறைமுகத்தை எல்.முருகன் இன்று பார்வையிட்டார்.

    இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை எல்.முருகன் சந்திக்க உள்ளார்.

    • கடல்சார் கண்காணிப்பு விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார்.
    • இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன உளவு கப்பலான யுவான் வாங்-05 நாளை வருகை தர உள்ளது.

    கொழும்பு:

    இலங்கை கடற்படைக்கு இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட டோர்னியர் -228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்தது. இந்தியாவின் சுதந்திர தினமான இன்று அந்த விமானம், இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

    இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ள இந்திய கடற்படையின் துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட், கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லேயுடன் இணைந்து, கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார்.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை வரவேற்ற இந்திய தூதர் கோபால் பாக்லே

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை வரவேற்ற இந்திய தூதர் கோபால் பாக்லே

    நிகழ்ச்சியில் பேசிய கோபால் பாக்லே, பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன், இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாக டோனியர்-228 விமானம் பரிசு அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

    இந்தியாவுடனான ஒத்துழைப்பின் பிற பகுதிகளின் பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோர்னியர் விமானம் பரிசாக வழங்கப்பட்டிருப்பது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகும். இந்தியாவின் பலம் அதன் நட்பு நாடுகளின் பலத்தை கூட்டுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் கோபால் பாக்லே கூறினார்.

    இந்த கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இயக்குவதற்கு இந்திய கடற்படை ஏற்கனவே இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் குழுவினருக்கு பயிற்சி அளித்துள்ளது.

    இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன உளவு கப்பலான யுவான் வாங்-05 நாளை வருகை தர உள்ளது. இதறகு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இந்தியா இலங்கையிடம் தூதரக ரீதியில் கோரியிருந்தது. ஆனால் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனக் கப்பலின் வருகைக்கு இலங்கை அனுமதி அளித்தது.

    இந்த நிலையில், தமது உளவு விமானமான டோர்னியர் 228 என்ற விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    ×