search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர் கைது"

    லண்டனில் இளம் பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததால் இந்தியாவைச் சேர்ந்த வாலிபருக்கு 29 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    லண்டனில் வசிப்பவர் ரோகித் சர்மா(28). இவர் இந்தியாவைச் சேர்ந்தவராவார். லண்டனில் ஒரு கடையில் வேலை செய்யும் பெண்ணை கண்டு, காதல் வயப்பட்டுள்ளார். அன்று முதல் ஓராண்டுக்கும் மேலாக  அப்பெண் எங்கு சென்றாலும் பின் தொடர்வதையே வேலையாக பார்த்துள்ளார்.

    இதனை கண்டு கொள்ளாமல் அந்த பெண் பொறுமையாக இருந்து வந்துள்ளார். பின்னர் சமீபத்தில் அப்பெண்ணுக்கு அதிக அளவில் தொந்தரவு கொடுத்து மிரட்டியும் உள்ளார். இதனால் அப்பெண் ரோகித் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த புகாரை விசாரித்த காவல் அதிகாரி கூறுகையில், ‘2017ம் ஆண்டு அந்த பெண் கடையில் வேலை பார்த்தபோது ரோகித் அங்கேயே  பேசினார். அன்று மாலையே அவரது தந்தையுடன் வந்து, அப்பெண்ணை சந்தித்து தன்னை திருமணம் செய்ய சம்மதிக்குமாறு கூறியுள்ளார். இந்த தொல்லை தாங்க முடியாமல் வேறு கடைக்கு அப்பெண் மாறினார்.



    அப்போதும் விடாத ரோகித், எப்படியோ அலைந்து திரிந்து அந்த பெண் வேலை பார்க்கும் வேறொரு கடையையும், அப்பெண்ணின் செல்போன் நம்பரையும் கண்டுபிடித்து விட்டார். நாள் ஒன்றுக்கு 40க்கும் மேற்பட்ட போன்கால்கள், எண்ணற்ற குறுஞ்செய்திகள் அனுப்பி தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

    ரோகித்தின் இந்த தொந்தரவினால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் மீண்டும் மற்றொரு கடைக்கு மாறியும் எந்த பயனும் இல்லை. அங்கும் ரோகித் வந்து தொந்தரவு செய்துள்ளார்’ என கூறினார்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி ரோகித்தை போலீசார் கைது செய்தனர். ரோகித் மீது பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில்,  பாலியல் தொந்தரவு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று முன்தினம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரோகித்துக்கு 29 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளனர்.


    அமெரிக்காவில் சிறுமிக்கு 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. #IndianOriginManJailed
    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக் தேஷ்பாண்டே(41). இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த இவர், ஆன்லைன் ஆப் ஒன்றின் மூலம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஆர்லாண்டோவைச் சேர்ந்த சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அந்த சிறுமியுடன் உரையாடும்போது, தான் ஒரு மாடலிங் ஏஜென்ட் என கூறியுள்ளார்.

    இதையடுத்து அந்த சிறுமியிடம் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை அனுப்பும்படி வற்புறுத்தியுள்ளார். அந்த சிறுமியும் அனுப்பியுள்ளார். இதேப்போல் சில மாதங்கள் தொடரவே, தீபக் மீண்டும் அந்த சிறுமியிடம் வேறு இரு நபர்கள் போல பேசி புகைப்படங்கள் கேட்டுள்ளார்.

    இதனையடுத்து 2017ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் , தேஷ்பாண்டே அந்த சிறுமியை நேரில் காண ஆர்லாண்டோவுக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் ஒவ்வொரு முறையும் ஆர்லாண்டோ பகுதிக்கு வரும்போதும் அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இது தொடர்ந்துள்ளது. இதுபற்றி கிடைத்த தகசிய தகவலின் அடிப்படையில், எஃப்பிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறுமியைப் போல பேசி,  தீபக்கினை ஆர்லாண்டோவிற்கு வரவழைத்தனர். ஆர்லாண்டோ விமான நிலையத்தை வந்தடைந்த தீபக்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவன் மீது நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கு விசாரணையின்போது தீபக் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். பின்னர் இவ்வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதிகள் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், தீபக் தேஷ்பாண்டேவிற்கு ஆயுள் தண்டனை விதித்தனர். #IndianOriginManJailed
    எச்1பி விசா மோசடி தொடர்பாக அமெரிக்க வாழ் இந்தியரை போலீசார் கைது செய்தனர். #H1B

    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிஷோர்குமார், கவுரு (46). அமெரிக்க வாழ் இந்தியரான இவர் 4 கன்சல்டிங் கம்பெனிகள் நடத்தி வருகிறார். அவற்றுக்கு தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார்.

    இவர் கம்பெனியில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு போலி ஆவணங்கள் மூலம் எச்1பி விசா பெற்று தந்துள்ளார். மேலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தராமல் இருந்தார்.

    இந்த குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். #H1B

    ×