என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இண்டர்நெட் சேவை"
- ஆப்டிகல் பைபர் கேபிள்கள் 85 சதவீதம் மின் பாதை வழியாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் அமைக்கப்பட உள்ளன.
- சேவை மையங்களில் இருந்த 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள இணையதள வசதிகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் அதிவேக இன்டர்நெட் சேவை இணைப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும், அதிவேக இணையதள இணைப்பு வழங்க பாரத் நெட் திட்டத்தின் 2-ம் கட்டம், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலமாக, அனைத்து வட்டாரங்களும், கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளன.
ஆப்டிகல் பைபர் கேபிள்கள் 85 சதவீதம் மின் பாதை வழியாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் அமைக்கப்பட உள்ளன.
இப்பணிகள் நிறைவடைந்ததும் கிராமப் பகுதிகளில் அகண்ட அலைவரிசை இணைப்புகளை வை-பை வசதி ஏற்படுத்துதல், தனிநபர் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கல், அகண்ட அலைவரிசை இணைப்புகளை குத்தகைக்கு விடுதல் மற்றும் செல்போன் டவர்களுக்கு இணைப்புகள் வழங்குதல் ஆகிய முன்னேற்றம் அடைந்த தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையங்கள் மற்றும் வட்டார ஊராட்சி சேவை மையங்கள் இந்த திட்டத்தின் இருப்புப் புள்ளியாக மாற்றப்பட்டுள்ளன. இந்த சேவை மையங்களில் இருந்த 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள இணையதள வசதிகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணி முடிந்தவுடன் கிராம ஊராட்சி சேவை மையங்களில் இருந்து ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் 1 ஜி.பி.பி.எஸ். அதிவேக இன்டர்நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, கிராம ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி, உள்ளிட்ட வரி இனங்கள் மற்றும் கட்டிட அனுமதி ஆகியவற்றுக்கான கட்டணங்களை இணையதளம் மூலமாகவே பொதுமக்கள் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறி உள்ளதால், தகவல் புரட்சியை ஏற்படுத்தும் சிறப்பு மிக்க இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கு, அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிகளும், விவசாயி–களும், பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்