search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இசைக்கலைஞர்கள்"

    • திருவையாறில் புகழ்பெற்ற சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176 வது ஆராதனை விழா நாளை தொடங்குகிறது.
    • ராமப்பா அக்ரஹாரம் சிமெண்ட் ரோடு பாதை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

    திருவையாறு:

    திருவையாறில் புகழ்பெற்ற சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176 வது ஆராதனை விழா நாளை 6-ந்தேதி மாலை தொடங்குகிறது.

    தொடர்ந்து 6 நாட்கள் நடக்கும் இவ்விழாவிற்கு அரசு சார்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் இசை ரசிகர்கள் ஏராளமா னோர் வருகையை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக திருவையாறு கடைத்தெருவில் சாலை யோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சம்பந்தப்பட்ட அரசுத் துறையினரால் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்நிலையில், தியாகராஜர் சுவாமிகளின் இசை விழா நடக்கும் தியாகராஜர் காலனி மற்றும் தியாகராஜர் சமாதிக்கு மெயின் சாலையில் இருந்து 3 வழியாகவும் ராமப்பா அக்ரஹாரம் காவிரிக் கரை சிமெண்ட் ரோடு வழியாகவும் என 4 வழிகளிலும் பொதுப்பாதை உள்ளது.

    ஆனால், ராமப்பா அக்ரஹாரம் சிமெண்ட் ரோடு பாதை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் இப்பாதையை பயன்படுத்த முடியாததோடு, இப்பாதையின் உட்புறம் உள்ள முகாசா கல்யாணபுரம் பஞ்சாயத்து மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து தண்ணீரை குழாயிலிருந்து திறக்கவும் அடைக்கவும் பராமரிக்கவும் டேங்க் ஊழியர் பொதுப்பாதையிலிருந்து 1/2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தனியார் வீட்டின் வழியாகவே சென்று வர வேண்டியிருக்கிறது.

    இதனால் திருமஞ்சன வீதி, முத்து நாயக்கன் தெரு, செவ்வாய்க்கிழமை தெரு மற்றும் ராமப்பா அக்ரஹாரம் ஆகிய 4 தெருக்களிலிருந்து சுமார் 100 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்ப ட்டுள்ளனர்.

    எனவே ராமப்பா அக்ரஹாரம் வழியாக தியாகராஜர் சமாதிக்கு செல்லும் பொதுப்பாதையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொது மக்கள் சம்பந்தப்பட்ட அரசுத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×