search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலய தேர்த்திருவிழா"

    • தேர்த்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
    • முன்னதாக சிறப்பு திருப்பலி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டேட் பேங்க் சாலையில் பழைமை வாய்ந்த புனித அமல அன்னை தேவலாயம் (சர்ச்) உள்ளது. இந்த தேவலாயத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா விமர்சை யாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. கோவை மறைமாவட்ட பொருளாளர் அருண் ஞானப்பிரகாசம் தலைமை தாங்கி புனித அமல அன்னையின் படத்துடன் கூடிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக சிறப்பு திருப்பலி (பூஜை) நடந்தது.

    இதைத்தொடர்ந்து வரும் 7-ந் தேதி சிறப்பு திருப்பலிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ந் தேதி தேர்த்திருவிழா தொடங்குகிறது.

    அன்றைய தினம் காலை 8.15 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியை கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜேசாப் ஸ்தனிஸ் நிறைவேற்றுகிறார். திருப்பலி முடிந்ததும் மாலை வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.

    நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையான ஈரோடு மறைமாவட்ட முதன்மை குரு ஆரோக்கிய ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×