search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்எஸ் மங்கலம் கொள்ளை"

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே வீட்டில் இருந்த 22 ½ பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தொண்டி:

    ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பண்ணாகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது42). இவர் தனது தங்கை சாந்தி திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்த நகையை தனது தாயார் பாக்கியம் பொறுப்பில் வைத்திருந்தார்.

    இதை அறிந்த மர்ம மனிதர்கள் யாரும் வீட்டில் இல்லாதபோது 22 ½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம்.

    இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×