search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆத்தூரில் மனைவி"

    கணவன் குடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்ட என் மீதும் குழந்தைகள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக மனைவி பூமதி கொடுத்த வாக்குமூலத்தையடுத்து போலீசார் அவரது கணவரை கைது செய்தனர். #HusbandArrested
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(வயது 30). ரிக் வண்டி டிரைவர். இவரது மனைவி பூமதி(26). இவர்களுக்கு பூவரசன்(4) என்ற மகனும், நிலா(3) என்று மகளும் இருந்தனர்.

    இந்நிலையில் கார்த்தி ரிக் வண்டி டிரைவர் வேலைக்கு செல்வதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது வாங்கி குடித்துவிடுவார். பின்னர் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வார் என்று கூறப்படுறது. மேலும் குடும்ப செலவுக்கு கூட பணம் கொடுக்கவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

    சம்பவத்தன்று கணவரிடம் இப்படி குடித்துவிட்டு வந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்று பூமதி தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி பூமதி மற்றும் மகன் பூவரசன், மகள் நிலா ஆகிய 3 பேரும் உடலில் தீப்பிடித்த நிலையில் கதறி துடித்தனர்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

    இதற்கிடையில் இன்று காலை பூமதி மற்றும் மகள் நிலா ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    முதலில் பூமதி குழந்தைகளுடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் போலீசாரிடம் பூமதி கொடுத்த வாக்குமூலத்தில் கணவன் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததாகவும் இதை தட்டிக்கேட்ட என் மீதும் குழந்தைகள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறி இருந்தார்.

    இதையடுத்து போலீசார் மனைவி மற்றும் குழந்தையை எரித்துக் கொன்றதாக கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீக்காயம் அடைந்த பூவரசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #HusbandArrested
    ×