search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வதன விநாயகர்"

    • அஸ்வதன விநாயகருடைய அமைப்பு அரச மரத்தின் “எட்டு இலை”களால் ஆனது.
    • இவரை வணங்குவதால் ராஜ தன்மை, ஜனவசீகரம் முதலிய பலன்கள் கிடைக்கின்றன.

    அஸ்வதன விநாயகருடைய அமைப்பு அரச மரத்தின் "எட்டு இலை"களால் ஆனது. அதாவது

    * நேத்ர மென்னும் கண்களின் மேல் பகுதியில் சூலமும், காதுகளில் குண்டலமும், வலது கரத்தில் "ஓம்" என்கிற பிரணவ மூல எழுத்தும், இடது கரத்தில் சுழல்கின்ற இந்தப் பூமியில் சமத்துவக் குறியீடான ஸ்வஸ்திக்கு இருக்கின்றது.

    * வயிற்றில் அரவமென்னும் பாம்பினை போன்ற முப்புரிநூல் இச்சா, ஞான, கிரியா சக்திகளையும், ஞானம், செல்வம், வீரம் ஆகிய பேறுகளையும் அளிப்பதாக விளங்குகின்றது.

    * நீலநிற இரு தந்தங்களும் தோஷங்களை விலக்குகின்ற தன்மையுடையதாகவும், எட்டு தனங்களும் மனிதனுக்குரிய நல்ல குணங்களை குறிப்பனவாகவும் உள்ளன.

    *அஸ்வதன விநாயகருடைய தன மென்கிற இலைப்பகுதிகளில் அரச மரத்தில் பல தெய்வங்கள் இருப்பதைப் போலவே பிரம்ம ருத்திரர்கள், திக்கஜங்கள், நட்சத்திராதி தேவதைகள் வசிக்கிறார்கள்.

    இவரை வணங்குவதால் பிள்ளைக்கனி தீர்வதோடு ராஜ தன்மை, ஜனவசீகரம் முதலிய பலன்கள் கிடைக்கின்றன.

    மேலும்,

    "அஷ்டதன மத்யே கணேசம்

    சாந்தரூபம்

    மதத்ரி ணேத்ரம்

    நாகா பரண புஷிதம்

    த்ரி சூல பாணினம், கிரீட

    மகுட தாரினம்

    சர்வ சித்திரப்ரதம் அஸ்வ

    தன கணேசம் பஜே"

    இதுவே அஸ்வதன விருட்ச கணேசரின் வழிபாட்டு சுலோகம்.

    இதன் பொருள் எட்டுதனங்களை கொண்டவரும், அமைதியான உருவத்தை உடையவரும் யானையின்

    மூன்று கண்களைப் போன்ற சிறு கண்களைக் கொண்டு ஆர்ப்பவரும், பல ஆபரணங்களைச் சூடியவரும்,

    மிகவும் தூய்மையான, வெள்ளைப் பூணூலை அணிந்து கொண்டிருப்பவரும், முகத்தின் நடுப்பகுதியில்

    சக்தி வடிவமானவரும், சிவபெருமானுடைய ஆயுதமான த்ரி சூலாயுதத்தை திலகமாக பொருத்தி இருப்பவரும்,

    தலையிலுள்ள சிகைப் பகுதிகள் கிரீட மகுடத்தை அணிந்திருப்பவரும் இந்த சாந்தரூபமான அரச இலைகளால்

    அமைந்து அருள் தருபவரான அஸ்வதன விநாயகரை வணங்கி நலம் பெறுவோமாக!

    • அரச மரத்தை “ராஜ விருட்சம்” என்று அழைப்பார்கள்.
    • அரச மர நிழலில் உள்ள விநாயகர் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பர்.

    அஸ்வத்தம் என்றால் அரச மரத்தை குறிக்கின்றது.

    பொதுவாக அரச மரத்தையும் அதிலுள்ள பொருள்களையும் அடுப்பில் எரிக்கக் கூடாது என்றும்,

    தெய்வங்களைக் குறித்து செய்யப்படுகிற ஹோமங்களில் மட்டுமே இதன் குச்சிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் சாஸ்திர விதி உண்டு.

    அரச மரத்தை "ராஜ விருட்சம்" என்று அழைப்பார்கள்.

    இதனால் தான் கிராமப்புறங்களில் உள்ள பஞ்சாயத்து மேடைகளில் அரச மரம் காணப்படும்.

    அரச மரத்தின் கீழ் அமைந்த விநாயகர் மிகவும் விசேஷமானவர்.

    இந்த அமைப்புள்ள கணபதி மூர்த்தங்களை வணங்குவதால் நமக்கு சீரிய பலன்கள் சித்தியாகும் என்பது உறுதி.

    அவற்றில் முக்கியமாக உயர்பதவி, வாரிசு உண்டாகுதல், சீரிய நலமான வாழ்க்கை பாதை இவை முக்கியமானவை.

    அரச மர நிழலில் உள்ள விநாயகர் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பர்.

    இந்த விநாயகர் கேட்டதைத்தரும் குணம் கொண்டவர் என்பதால், இன்றும் கிராமத்துப் பெண்கள் நதி தீரத்தில் நீராடிவிட்டு

    அவருக்கு அரிசியும், வெல்லமும் படைத்துவிட்டு, ஈரத்துணியோடு பதினாரு முறை அடிப்பிரதட்சணம் செய்வார்கள்.

    விநாயகரை அரச மரத்தின் கீழ் வழிபட வசதி இல்லாதவர்களுக்கும், அந்த முறை தெரியாதவர்களுக்கும்

    "அஸ்வதன விநாயகர்" பூஜை சிறந்ததொரு வழிகாட்டும் பூஜை முறையாக விளங்குகின்றது.

    ×