search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருணாசலபிரதேசம்"

    அருணாசல பிரதேச மாநிலத்தில் ரூ.163 கோடி சொத்துடன் முதல்-மந்திரி பெமா காண்டு முதல் இடத்தில் உள்ளார். #Arunachal #PemaKhandu
    இட்டாநகர்:

    அருணாசல பிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், 60 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்துக்கும் வருகிற 11-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் தற்போதைய முதல்- மந்திரி பெமா காண்டு, முக்தோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்த தகவலின் அடிப்படையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் ரூ.163 கோடி சொத்துடன் முதல்-மந்திரி பெமா காண்டு முதல் இடத்தில் உள்ளார்.

    மொத்த வேட்பாளர்களில் 131 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், அவர்களில் 67 பேருக்கு ரூ.5 கோடிக்கு அதிகமான சொத்துகளும், 44 பேருக்கு ரூ.2 கோடிக்கு மேல் சொத்துகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Arunachal #PemaKhandu 
    நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. #AndhraPradesh #Odisha #Sikkim #AssemblyPolls #LokSabhaElections
    புதுடெல்லி:

    ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு(2019) மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதனால் அங்கு கட்டாயம் தேர்தல் நடத்தவேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்துக்கும் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் தேர்தல் நடைபெறுகிறது.

    இதனால் நாடாளுமன்றத்துக்கு தேர்தலை நடத்தும்போது இந்த 4 மாநிலகளுக்கும் சேர்த்தே தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. இதேபோல் அண்மையில் கலைக்கப்பட்ட காஷ்மீர் மாநில சட்டசபைக்கும் வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதுபற்றி தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேச மாநிலங்களில் இதற்கு முந்தைய முன்மாதிரிகளைக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும். அதேநேரம் காஷ்மீரில் அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும். இதற்கான அதிக பட்ச கால அவகாசம் மே மாதத்துடன் முடிகிறது. அதற்குள்ளாகவே அங்கும் தேர்தலை நடத்தவேண்டிய நிலையும் உள்ளது. காஷ்மீரில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தும் போதே சட்டசபைக்கும் தேர்தலை நடத்தினால் பாதுகாப்பு படையினரின் தேர்தல் பாதுகாப்பு பணி எளிதாக முடிந்துவிடும் என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபை தேர்தலும் சேர்ந்தே நடைபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்னொரு அதிகாரி கூறுகையில், “மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலம் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிகிறது. இந்த 2 மாநிலங்களிலும் பா.ஜனதா அரசுதான் உள்ளது. அவர்கள் 6 மாதத்துக்குள் சட்டசபையை கலைக்க முன்வந்தால் அந்த 2 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும்” என்றார். #AndhraPradesh #Odisha #Sikkim #AssemblyPolls #LokSabhaElections
    அருணாசலபிரதேச எல்லையையொட்டி தங்கச்சுரங்கம் தோண்டும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது. #India #China #GoldMine
    பீஜிங்:

    இந்தியாவின் அண்டை நாடான சீனா, தனது நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள அருணாசலபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. அருணாசலபிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது.

    இதுதொடர்பாக அத்துமீறி இந்தியா மீது சீன படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அருணாசலபிரதேச எல்லையில் எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபரை சந்தித்து பேசியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அருணாசலபிரதேச எல்லையையொட்டி சீனா தங்கச்சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி உள்ளது.

    இந்த சுரங்கத்தில் தங்கம் தவிர வெள்ளி மற்றும் பல விலைமதிப்புள்ள கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று சீன பத்திரிகை ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் பணிக்காக அங்கு சாலை வசதிகள் உள்ளிட்ட இதர உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    ஏற்கனவே இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில், அருணாசலபிரதேச எல்லையையொட்டி சீனா தங்கச்சுரங்கம் தோண்டுவது பிரச்சினையை மேலும் வலுப்படுத்தி உள்ளது. 
    ×