search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசமரம் சாய்ந்தது"

    • 4 பேருக்கு காயம் ஏற்பட்டது

    வேலூர்:

    வேலூர்-ஆற்காடு சாலை யில் உள்ள காகிதப்பட்டறை டான்சி அருகே சுமார் 200 ஆண்டுகள் பழமையான அர சமரம் ஒன்று இருந்தது. இதன் கீழே விநாயகர் சில வைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அந்த மரம் வலுவிழந்து இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மரம் சாலையில் விழுந்தது. அந்த வழியாக சென்ற 2 பெண் கள் உள்பட 4 பேருக்கு காயங் கள் ஏற்பட்டது.

    மேலும் அங்கு நிறுத்தப்பட் டிருந்த பைக்குகள், ஒரு கார் சிக்கிக் கொண் டது. மின்ஒயர்கள் அறுந்த தால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்த மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் ஒன்றும் சேதமடைந்தது.

    சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் வேலூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மரக் கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சாலை ஓரம் முறிந்து விழுந்த அரச மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×