search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்புறப்படுத்த"

    • நீர்க்கசிவு ஏற்பட்ட பிளாட்பாரத்தின் மேல் கூரையை பார்வையிட்டார்.
    • வடசேரி பஸ் நிலையம் ரூ.4 கோடி செலவில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் ரூ.4 கோடி செலவில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தின் மேல் கூரையில் நீர்க்கசிவு ஏற்படுவதாக மாநகராட்சி மேயருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீர்க்கசிவு ஏற்பட்ட பிளாட்பாரத்தின் மேல் கூரையை பார்வையிட்டார்.

    நீர்க்கசிவுக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத தொடர்ந்து பஸ்நிலையத்தில் உள்ள கழிவறையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரை தொடர்ந்து கழிவறையையும் ஆய்வு செய்தார். கழிப்பறையின் தரை தளத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தவும், மேலும் கழிவு தேங்காமல் இருக்க உறிஞ்சி குழாய் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக ஏ.டி.எம்.மிஷின் களை நிறுவுவதற்கும், நடைபாதையில் இடை யூறாக இருக்கின்ற கடைகளை மாற்றுவதற்கும் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 1½ மணி நேரமாக பஸ் நிலையம் முழுவதும் ஆய்வு மேற்கண்ட மேயர் மகேஷ் பஸ் நிலையத்தை சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறுத்தினார். பின்னர் மேயர்மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வடசேரி பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிளாட்பாரத்தின் மேல் கூரையில் நீர்க்கசிவு இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதை சரி செய்ய என்னென்ன நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. அப்போது மேல் கூரை மேல் தகர கூரைகள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். எனவே நீர்கசிவு ஏற்படும் பகுதிகளில் தகர கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது ஆணை யாளர் ஆனந்தமோகன் நகர்நல அதிகாரி ராம் மோகன், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலை மை செயற்குழு உறுப்பி னர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×