search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடி மாற்றங்கள்"

    • 14 மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்க ஏற்பாடு
    • மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர் செல்வ மும், இணை ஒருங்கி ணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் செயல்பட்டு வந்தனர்.

    அதன்பின்பு கட்சிக்குள் ஒற்றை தலைமையை ஏற்படுத்த மூத்த நிர்வாகிகள் முயற்சி செய்தனர். இதையடுத்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை ஏற்க மறுத்த ஓ.பன்னீர் செல்வம் சட்டபோராட்டத்தில் ஈடுபட்டார். இதில் எடப்பாடி பழனிசாமிக்கே வெற்றி கிடைத்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    இதையடுத்து அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்து வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் பணிகளை தொடங்கி விட்டார். அதன் முதல் கட்டமாக சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் சில மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவில்லை.

    கூட்டத்தில் பங்கேற்காத மாவட்ட செயலாளர்கள் யார்-யார்? என பட்டிய லிட்ட போது அவர்கள் ஓ.பன்னீர் செல்வம் ஆதர வாளர்கள் என தெரிய வந்தது. கட்சியில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்து அவரது அணியில் இணைந்து கொண்டனர்.

    ஆனால் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்த சில மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்காதது தெரியவந்தது. இதில் குமரி கிழக்கு மாவட்டம், தஞ்சாவூர், சென்னையில் 2 மாவட்ட செயலாளர்கள் உள்பட 6 பேர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாக இருப்பது தெரியவந்தது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு, புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    அந்த வகையில் குமரி கிழக்கு மாவட்ட செய லாளராக இருந்த எஸ்.ஏ.அசோகன் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் ஆவார். எனவே அவருக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளரை நியமிக்க ஏற்பாடுகள் நடந்து வரு கிறது. இதுபோல கட்சி பணிகளில் ஆர்வம் காட்டா மல் இருக்கும் மாவட்ட செயலாளர்களை கண்ட றிந்து அவர்களையும் ஓரங் கட்ட கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன்படி குமரி, தஞ்சை, சென்னை உள்ளிட்ட 14 மாவட்ட செயலாளர்கள் புதிதாக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படும் போது அந்த பதவியை கைப்பற்ற இப்போதே பல நிர்வாகிகள் காய்நகர்த்த தொடங்கி விட்டனர்.

    இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த எஸ். ஏ.அசோக னுக்கு பதிலாக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்பட குமரி மாவட்டத்தை சேர்ந்த சில மூத்த நிர்வாகி களின் பெயர்கள் அடிபடு கிறது. இவர்களில் யாருக்கா வது ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங் கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பாராளு மன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கன்னியா குமரி கிழக்கு மாவட்டத்தில் புதிய மாவட்ட செயலாளரை நியமனம் செய்து கட்சியை மேலும் வலுப்படுத்த மூத்த நிர்வாகிகள் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளனர்.

    ×