search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்"

    • 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • 40 தொகுதிகளையும் வெல்ல அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் பஸ் நிறுத்தம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    1-வது வார்டு செயலாளர் சாந்திபூஷன் அனைவரையும் வரவேற்றார். கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.பி திருப்பூர் சிவசாமி, ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, திரைப்பட இயக்குநர் ரங்கநாதன், தலைமை பேச்சாளர் எடப்பாடி சிவசண்முகம் ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பார்கள் பேசும்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளையும் வெல்ல அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றனர்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கோவனூர் துரைசாமி, கே.வி.என்.ஜெயராமன், எம்ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வீரபாண்டி விஜயன், பொதுக்குழு உறுப்பினர் ஐ.கே.எஸ்.சதீஷ்குமார், பகுதி செயலாளர் வக்கில் ராஜேந்திரன், நகர செயலாளர்கள் ரகுநாதன், ஆனந்தன், டியூகாஸ் துணைத்தலைவர் செல்வராஜன், ஊராட்சித்தலைவர்கள் ரவி, ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் பூக்கடை ரவி, மாணிக்கம், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். முடிவில் கவிச்சந்திரமோகன் நன்றி கூறினார்.

    ×