என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அகற்றிய"
- தீக்குளிக்க முயன்ற முதியவரை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது
- 40 ஆண்டுகளாக ஓட்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட் சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெண்ணவால்குடி ஊராட்சியில் உள்ள தச்சன்கோரைப்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவ ர் அந்தப் பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஓட்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவரைப்போல அந்தப் பகுதியில் நத்தம் புறம் போக்கு இடத்தில் சிலர் அனுபவம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் செல்வரா ஜ் நத்தம் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாகவும் இதனால் அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் பொ ங்கல் வைத்து வழிபட முடியவில்லை என்று கூறி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். மேலும் 40 ஆண்டு காலமாக வசித்து வருவதாகவும், வேறு எதற்கும் பயன்படாத இடத்தில் நான் வசித்து வருவதாகவும் அதனா ல் தனக்கு மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க வேண்டும் என்று செல்வராஜ் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் செல்வராஜ் வீடு உட்பட ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.
அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே செல்வராஜ் மற்றும் அவரது மருமகள் சுதா ஆகிய இருவரும் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை அங்கிருந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். மேலும் செல்வராஜ், சுதா ஆகியோர் வீட்டிற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு வீட்டை பொக்லைன் எந்திரத்தின் உதவுயுடன் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்