search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகதிகள் மீட்பு"

    • தனுஷ்கோடி அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அகதிகள் தங்களது குழந்தைகளுடன் தவித்துக் கொண்டிருந்தனர்.
    • மீனவர்கள் மண்டபம் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அங்கு வசிக்கும் இலங்கை தமிழர்கள் இடம் பெயர்ந்து தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி அருகில் உள்ள 5-வது மணல் திட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அகதிகள் தங்களது 3 குழந்தைகளுடன் இன்று தவித்துக் கொண்டிருந்தனர்.

    இதனை கண்ட மீனவர்கள் மண்டபம் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் படை போலீசார் 5 பேரையும் மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கடந்த 5-ந் தேதி தனுஷ்கோடி அருகில் உள்ள 5-வது மணல் திட்டையில் இறக்கிவிடப்பட்டோம் என்றும், படகில் வந்தபோது தங்களுடன் வந்த ஒருவர் கடலில் குதித்து விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், படகில் வந்தபோது இலங்கை கடற்படையினர் தங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர்களிடம் இருந்து தப்பி இங்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

    மேலும் விசாரணையில் அவர்கள் இலங்கை தலைமன்னார் மாவட்டம் தாழ்வு பாடியைச் சேர்ந்த சபரி (வயது 33)அவரது மனைவி ரதிகா (31) மகன் சதீஷ்(7) மகள் சல்மா(4) அகின் (6 மாத குழந்தை) என்பது தெரியவந்தது.

    அவர்கள் 5 பேரும் பிளாஸ்டிக் படகு மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் தமிழகம் வந்ததாகவும், கடந்த 2 நாட்களாக மணல் திட்டுபகுதியில் தவித்ததாகவும் தெரிவித்தனர்.

    ×