என் மலர்
நீங்கள் தேடியது "youngman who stole"
- திருவிழா கூட்டத்ைத பயன்படுத்தி கலைக்குழுவினரிடம் ஒரு வாலிபர் திருட முயன்றார்.
- அதிர்ச்சி அடைந்த அவர்கள் சத்தம்போடவே பொதுமக்கள் ஒன்று கூடினர். திருட முயன்ற வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே தென்னம்பட்டி காளியம்மன், மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட்டு உத்தரவுபடி திருவிழா நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.
இந்த நிலையில் கலைநிகழ்ச்சிகள் நடத்த குழுவினர் தென்னம்பட்டி வந்தனர். திருவிழா கூட்டத்ைத பயன்படுத்தி கலைக்குழுவினரிடம் ஒரு வாலிபர் திருட முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சத்தம்போடவே பொதுமக்கள் ஒன்று கூடினர். திருட முயன்ற வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை யில் அந்த வாலிபர் பழனியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்ததால் அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






