search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman running"

    • வீட்டில்ஆர்த்தி சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடைபெற்றது.
    • நேற்று மாலை வீட்டில் இருந்த ஆர்த்தி பக்கத்து வீட்டில் உள்ள வாலிபருடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி செட்டி பட்டறை பகுதியைச் சேர்ந்த கதிர் காமன் மகள் ஆர்த்தி (வயது 23) கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு வீட்டில் இவரது சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடைபெற்றது.

    நேற்று மாலை வீட்டில் இருந்த ஆர்த்தி பக்கத்து வீட்டில் உள்ள வாலிபருடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஆர்த்தியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆர்த்தியின் வீட்டின் அருகில் இருந்த வாலிபரான வினோத்குமார் (25) கூலித்தொழிலாளி. இவருக்கும் ஆர்த்திக்கும் இடையில் முன்னதாகவே காதல் இருந்து வந்ததும். அதனால் அவர்கள் காதலித்து வந்ததும் தெரியும் வந்தது.

    தற்போது வீட்டில் ஆர்த்திக்கு திருமண ஏற்பாடு நடைபெறுவதை கண்டு ஆர்த்தி வினோத் குமார் உடன் வீட்டை விட்டு சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×