search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worship Lord Shiva"

    • சிவபெருமானுக்கு 2 டன் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபாடு நடந்தது.
    • பொருளாளர் கண்ணன் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே எஸ்.கல்விமடை கிராமத்தில் கி.பி 10-ம் நூற்றாண்டை சேர்ந்த, மிகவும் பழமை வாய்ந்த, திருநாகேஸ்வர முடையார் சமேத திருநா கேஸ்வரி தாயார் கோவில் உள்ளது. இங்கு 23-ஆம் ஆண்டு புரட்டாசி மகாளய அமாவசை திருவிழா விமரி சையாக நடைபெற்றது.

    இதில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளான சிவப்பெருமான் மற்றும் அம்பாளுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சுவாமி-அம்பாளுக்கு வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக் கொழுந்து, முல்லை, மல்லி கை பூ உள்ளிட்ட சுமார் 2 டன் எடையுள்ள 11 வகை யான மலர்களால் அபி ஷேகம் செய்து அலங்கரிக்கப் பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    மேளதாளங்கள் மற்றும் வான வேடிக்கை முழங்க உற்சவர் பூ பல்லாக்கில், முளைப்பாரியுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது வீடுதோறும் பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமியை வரவேற்றனர்ல் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட் டங்களில் இருந்து ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.கோயில் திருப்பணிக்குழு தலைவர் பாவா மோகன், துணைத் தலைவர் முத்தையா, செயலாளர் தங்கச்சாமி, பொருளாளர் கண்ணன் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    ×