search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workers clash"

    மதுராந்தகத்தில் தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையை தீர்க்க கோரி வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வெளியூரிலிருந்து வரும் பொருட்களை இறக்குவதற்காக சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து வரும் பொருட்களை தாங்களே இறக்கி கொள்கிறோம் என்று கூலித் தொழிலாளர்களிடம் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

    நேற்று காலை ஒரு மளிகை கடையில் எண்ணெய் பாக்கெட்டுகளை இறக்க முயன்றபோது ஒரு வியாபாரிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அப்போது தொழிலாளர்கள் பொருட்களை பறித்து தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையை தீர்க்க கோரி வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. கடை வீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    ×