search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker slips and dies"

    • பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர், கேக் வாங்க மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.
    • தனியார் மில் அருகே சென்றபோது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் சாலையோரம் விழுந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சோலைகவுண்டர். இவரது மகன் முரளி (வயது 28). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று அவருக்கு பிறந்தநாள் ஆகும். பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர், கேக் வாங்க மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

    வலசையூர் பகுதியில் உள்ள தனியார் மில் அருகே சென்றபோது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் சாலையோரம் விழுந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், படுகாயம் அடைந்த முரளியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, முரளி பரிதாபமாக இறந்தார். இதனை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    பிறந்த நாளிலேயே தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×