என் மலர்
நீங்கள் தேடியது "Worker hit by train and dies"
- குழந்தை இல்லை. இந்த விரக்தியில் பாலாஜி மது போதைக்கு அடிமையானார்.
- கடந்த 22ம் தேதி தனது கணவனரை காணவில்லை என வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.எம். காலனி 13-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் பாலாஜி (வயது33). சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு சசிகலா என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து பாலாஜி தனியாக வசித்து வந்தார். பின்னர் புவனேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டு வேடசந்தூரில் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த விரக்தியில் பாலாஜி மது போதைக்கு அடிமையானார்.
கடந்த 22ம் தேதி தனது கணவனரை காணவில்லை என வேடசந்தூர் போலீசில் புவனேஸ்வரி புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு திண்டுக்கல் ஆயுதப்படை மைதானம் அருகே நெல்லையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச் சம்பவம் குறித்து ரயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






