என் மலர்
நீங்கள் தேடியது "Worker Dead Near Muthupettai"
முத்துப்பேட்டையில் கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். இன்னொருவர் படுகாயம் அடைந்தார்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் மில்லடி பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியம் (வயது 50). உதய மார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் செல்வமணி (46). இவர்கள் 2 பேரும் தச்சு வேலைக்கு செல்வதற்காக முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில் மேம்பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்த காட்டுநாவல் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் ஓட்டி வந்த கார் 2 பேர் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் முத்துப்பேட்டை போலீசார் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தவர். செல்வமணி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து போலீசார் மனோகரனிடம் விசாரணை நடத்தினர். அவர் தனது மாமியார் வீடு செல்வதற்காக வந்தபோது இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தார்.
முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் மில்லடி பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியம் (வயது 50). உதய மார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் செல்வமணி (46). இவர்கள் 2 பேரும் தச்சு வேலைக்கு செல்வதற்காக முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில் மேம்பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்த காட்டுநாவல் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் ஓட்டி வந்த கார் 2 பேர் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் முத்துப்பேட்டை போலீசார் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தவர். செல்வமணி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து போலீசார் மனோகரனிடம் விசாரணை நடத்தினர். அவர் தனது மாமியார் வீடு செல்வதற்காக வந்தபோது இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தார்.






