என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Wooden box"
- தொல்லியல் துறையினர் வர இருந்ததால் இரவு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மர்ம மரப்பெட்டியை பார்ப்பதற்காக பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
திருப்பதி:
விசாகப்பட்டினம் ஆர்கே கடற்கரையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அருகே மர்ம மரப்பெட்டி நேற்று கரை ஒதுங்கியது. அந்த பெட்டி 100 கிலோ எடைக்குமேல் இருந்தது .
இதனை கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். உள்ளூர் மீனவர்கள் பெரிய பெட்டியைக் கண்டுபிடித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மரப் பெட்டியை 2 மண் அள்ளும் எந்திரங்களின் உதவியுடன் மணலில் நகர்த்தப்பட்டது. காலையில் ஆய்வுக்காக தொல்லியல் துறையினர் வர இருந்ததால் இரவு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், இந்த மர்ம மரப்பெட்டியை பார்ப்பதற்காக பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
மோப்ப நாய் மற்றும் துப்புக் குழுவினர் அந்த இடத்திற்கு வந்து பெட்டியை ஆய்வு செய்தனர், அது காலியாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
இது பொதுவாக படகுகள் மற்றும் கப்பல்கள் மோதுவதைத் தடுக்க மரத்தால் செய்யப்பட்ட பெட்டி என்று உள்ளூர் மீனவர்கள் தெரிவித்தனர்.
"எப்போதாவது, இந்த பெட்டிகள் படகுகள் மற்றும் கப்பல்களில் இருந்து தூக்கி வீசப்படலாம் என்று போலீசார் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்