search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's t20 World Cup Cricket"

    • 6-வது முறையாக உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
    • மெக்லானிங் தலைமையில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி, 2022-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2014, 2018, 2020, 2023-ம் ஆண்டுகளில் நடந்த 20 ஓவர் உலக கோப்பைகள் என 5 கோப்பைகளை வென்று உள்ளது.

    பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6-வது முறையாக உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

    உலக கோப்பையை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய பெண்கள் அணி கேப்டன் மெக்லானிங் புதிய சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் அதிக கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    மெக்லானிங் தலைமையில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி, 2022-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை மற்றும் 2014, 2018, 2020, 2023-ம் ஆண்டுகளில் நடந்த 20 ஓவர் உலக கோப்பைகள் என 5 கோப்பைகளை வென்று உள்ளது.

    இதன் மூலம் அவர், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (4 முறை), இந்தியாவின் டோனி (3 முறை) ஆகியோரை முந்தினார்.

    • தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் அந்த அணியும், நியூசிலாந்தும் தலா 4 புள்ளியுடன் சம நிலையில் இருக்கும்.
    • 4 புள்ளிகளுடன் உள்ள இலங்கை ரன்ரேட்டில் மோசமாக இருந்ததால் வெளியேற்றப்பட்டது.

    கேப்டவுன்:

    8-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் 'குரூப் 2' பிரிவில் உள்ள இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று இருந்தது. இங்கிலாந்திடம் மட்டும் 11 ரன்னில் தோற்றது.

    3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ள ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 'குரூப் 2' பிரிவில் இருந்து இங்கிலாந்து ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.

    'குரூப் 1' பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி தோல்வி எதையும் சந்திக்கவில்லை.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 3 நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன.

    4-வது அணியாக நுழைவது யார்? என்று இன்றைய போட்டி முடிவில் தெரியும். இதற்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் உள்ளன.

    இன்று நடைபெறும் கடைசி 'லீக்' ஆட்டங்களில் இங்கிலாந்து-பாகிஸ்தான் (மாலை 6.30 மணி), தென் ஆப்பிரிக்கா-வங்காளதேசம் (இரவு 10.30 மணி) மோதுகின்றன. இங்கிலாந்து 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் அந்த அணியும், நியூசிலாந்தும் தலா 4 புள்ளியுடன் சம நிலையில் இருக்கும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும். தென் ஆப்பிரிக்கா தோற்றால் வெளியேறும்.

    4 புள்ளிகளுடன் உள்ள இலங்கை ரன்ரேட்டில் மோசமாக இருந்ததால் வெளியேற்றப்பட்டது.

    ×