என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
உலக கோப்பை அரைஇறுதிக்கு நுழையும் 4-வது அணி யார்? தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து இடையே கடும் போட்டி
- தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் அந்த அணியும், நியூசிலாந்தும் தலா 4 புள்ளியுடன் சம நிலையில் இருக்கும்.
- 4 புள்ளிகளுடன் உள்ள இலங்கை ரன்ரேட்டில் மோசமாக இருந்ததால் வெளியேற்றப்பட்டது.
கேப்டவுன்:
8-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் 'குரூப் 2' பிரிவில் உள்ள இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று இருந்தது. இங்கிலாந்திடம் மட்டும் 11 ரன்னில் தோற்றது.
3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ள ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 'குரூப் 2' பிரிவில் இருந்து இங்கிலாந்து ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.
'குரூப் 1' பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி தோல்வி எதையும் சந்திக்கவில்லை.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 3 நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன.
4-வது அணியாக நுழைவது யார்? என்று இன்றைய போட்டி முடிவில் தெரியும். இதற்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் உள்ளன.
இன்று நடைபெறும் கடைசி 'லீக்' ஆட்டங்களில் இங்கிலாந்து-பாகிஸ்தான் (மாலை 6.30 மணி), தென் ஆப்பிரிக்கா-வங்காளதேசம் (இரவு 10.30 மணி) மோதுகின்றன. இங்கிலாந்து 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் அந்த அணியும், நியூசிலாந்தும் தலா 4 புள்ளியுடன் சம நிலையில் இருக்கும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும். தென் ஆப்பிரிக்கா தோற்றால் வெளியேறும்.
4 புள்ளிகளுடன் உள்ள இலங்கை ரன்ரேட்டில் மோசமாக இருந்ததால் வெளியேற்றப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்