search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Protection Programme"

    • 238 கிலோ குட்கா பறிமுதல் செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், போலீஸ்காரர் சுந்தரம் ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
    • டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதல் முறையாக கடந்த 1989-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் ஏ.எஸ்.பி.ஆக பொறுப்பேற்று பணியாற்றினார்.

    ஈரோடு:

    ஈரோடு, கோபிசெட்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை ரெயில் மூலம் ஈரோடு வந்தார்.

    பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் போலீசார் வரவேற்றனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி வழங்கினார். பெருந்துறை பகுதியில் 238 கிலோ குட்கா பறிமுதல் செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், போலீஸ்காரர் சுந்தரம் ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

    இதேபோல் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூ.1 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 4 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், மெய்யழகன், செந்தில்குமார் ஆகியோரையும், கருங்கல்பாளையம் பகுதியில் 30 ரவுடிகள் கைது செய்யப்பட்டு அதில் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த ஈரோடு அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

    பின்னர் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக "பெண்கள் பாதுகாப்பு திட்டம்" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால் அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்து செல்லும்.

    அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பெண்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களில் மட்டும் 60 அழைப்புகள் காவல் துறைக்கு வந்துள்ளது.

    குறைவான தூரமாக இருக்கும் பட்சத்தில் காவல்துறை ரோந்து வாகனத்தில் அழைத்து சென்று விடப்படும். தூரம் அதிகமாக இருந்தால் ஆட்டோ அல்லது டாக்ஸிகளில் அனுப்பி வைக்கப்படும் என்பதோடு, பாதுகாப்புக்காக போலீசார் ஒருவர் உடன் செல்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதல் முறையாக கடந்த 1989-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் ஏ.எஸ்.பி.ஆக பொறுப்பேற்று பணியாற்றினார். தற்போது டி.ஜி.பி.யாக பணி உயர்வு பெற்று செயல்பட்டு வருகிறார். அவர் இன்று கோபிசெட்டி பாளையத்துக்கு வந்தார். பின்னர் தான் பணியாற்றிய அலுவல கத்துக்கு சென்று பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார். இதைத்தொடர்ந்து கோபி போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து போலீசாரிடம் தங்களது குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    ×