search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woamn death"

    குடியாத்தம் அருகே நாகப்பாம்பு கடித்ததில் பெண் பரிதாபமாக இறந்தார். உறவினர்கள் பாம்பை அடித்துக்கொன்று ஆஸ்பத்திரிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் குட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். விவசாய கூலி. இவருடைய மனைவி அம்பிகா (வயது 40). நேற்றிரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினர்.

    அதிகாலை 2 மணியளவில் அம்பிகாவின் கையில் நாகப் பாம்பு கடித்தது. தூக்கத்தில் இருந்த அவர் ஏதோ பூச்சி என்று உதறி தள்ளியுள்ளார். மீண்டும் நாகப்பாம்பு கடித்த போது, அலறி அடித்து எழுந்தார்.

    குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அம்பிகாவை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். நாகப்பாம்பையும் அடித்துக் கொன்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அம்பிகாவின் நிலைமை மிகவும் மோசமானதால், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அம்பிகா இன்று காலை இறந்தார்.

    குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ×