என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Without permission of gravel"
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம், அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குளம், கண்மாய், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன.
- இந்த நிலையில் அனுமதியின்றி போலி அனுமதிசீட்டுகளை வைத்து நீர்நிலைகளில் மணல் திருடப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம், அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குளம், கண்மாய், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இப்பகுதிகளில் அரசு அனுமதிபெற்று மணல் அள்ளி வருகின்றனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி போலி அனுமதிசீட்டுகளை வைத்து நீர்நிலைகளில் மணல் திருடப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதற்காக போலி அனுமதிசீட்டுகள் குறிப்பிட்ட நபர்கள் மூலம் பெற்றுவிடுகின்றனர். இதனைெகாண்டு கிராமங்களில் கிராவல் மணல் ஜே.சி.பி மற்றும் லாரிகளில் எடுத்துச்செல்கின்றனர்.
போலீசார் சோதனையிடும்போது இந்த ரசீதை காண்பிக்கின்றனர். இதற்காக ரூ.1800 வசூல் செய்யப்படுகிறது. மேலும் அள்ளப்படும் மணல் லோடுக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகை கைமாறுகிறது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால் சில நேரங்களில் கிராமமக்களே வாகனங்களை சிறைபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். இருந்தபோதும் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே போலி அனுமதிசீட்டு மூலம் மணல் அள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்