search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "windows damaged"

    ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்ம ஆசாமிகள் சிலர் கற்களை வீசி எறிந்ததால் ரெயிலின் முகப்பு பெட்டியின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. #VandeBharatExpress
    புதுடெல்லி:

    சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலை தயாரித்த நாட்டின் முதல் அதிவேக ரெயிலான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலை, கடந்த 15-ந்தேதி டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லி-வாரணாசி இடையே தனது முதல் வர்த்தக பயணத்தை கடந்த 17-ந்தேதி தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாரணாசியில் இருந்து டெல்லி நோக்கி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது மர்ம ஆசாமிகள் சிலர் அந்த ரெயிலின் மீது கற்களை வீசி எறிந்தனர். இதில் ரெயிலின் முகப்பு பெட்டியின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது.

    அதேபோல் பயணிகள் பெட்டிகள் சிலவற்றின் ஜன்னல் கண்ணாடியும் சேதம் அடைந்தது. இந்த கல்வீச்சில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் மீது இப்படி கல் வீசப்படுவது இது 4-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×