என் மலர்
நீங்கள் தேடியது "Wife also died"
- பெற்றோரை இழந்த குழந்தைகள் தவிப்பு
- டிரைவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
நெமிலி, செப்.14-
காஞ்சிபுரம் மாவட்டம் ஆரிய பெரும்பாக்கம் பகுதியில் விஜய் பாபு (41) அவரது மனைவி அனுசுயா (37) மகன் முகேஷ் (13) சோபியா (9) மகள் ஆகியோர் தனது பைக்கில் பனப்பாக்கம் நோக்கி சென்றனர்.
அப்போது முன்னாள் சென்ற லாரி மீது பைக் மோயது. இந்த விபத்தில் விஜய் பாபு சம்பவ இடத்திலேயே தலை துண்டித்து பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி அனுசுயா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் குழந்தைகள் எழும்பூர் ஸ்டான்லி மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
அனுசுயா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
அவர்களின் 2 குழந்தைகள் தாய், தந்தையை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
அவலூர் போலீசார் லாரி டிரைவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.






