என் மலர்
நீங்கள் தேடியது "welfare officer"
- சமையலா்களை நியமிக்க ரூ.2 கோடி வரை லஞ்சம் வாங்கியதாக ஊட்டி லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
- மரினா வீட்டிலும் ஊட்டி லஞ்ச ஒழிப்பு துறையினா் சோதனை மேற்கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 2020-2021-ம் ஆண்டில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அதிகாரியாக மரினா(வயது50) பணிபுரிந்தாா். இவா் பணிபுரிந்த காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் பள்ளிகள் மற்றும் ஆதிவாசி உண்டு உறைவிடப் பள்ளிகளில் சமையலா்கள் நியமிக்கும் பணி நடைபெற்றது.அப்போது 25 சமையலா்கள் தேவையான இடத்தில் 31 பேரை அதிகாரி மரினா நியமித்ததாக கூறப்படுகிறது.
இதற்காக அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக அப்போதே ஊட்டி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் வந்தது.
இதற்கிடையே ஆதிதிராவிட நல அதிகாரி மரினா அரியலூா் மாவட்டத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா். அங்கும் பணியில் இருந்தபோது செய்த சில முறைகேடுகளால் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில் மரினா, சமையலா்களை நியமிக்க ரூ.2 கோடி வரை லஞ்சம் வாங்கியதாக ஊட்டி லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இதற்கான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இதற்கிடையே சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள மரினா வீட்டிலும் ஊட்டி லஞ்ச ஒழிப்பு துறையினா் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.






