என் மலர்
நீங்கள் தேடியது "Welfare assistance worth Rs.8.70 crore"
- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை புதிய பஸ் நிலையத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- மொத்தம் 3484 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் தொகை ரூ.8 கோடியே 70 லட்சத்து 26 ஆயிரத்து 399 மதிப்பிலான உதவிகள் வழங்கினார்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை புதிய பஸ் நிலையத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளரும் மாவட்ட கவுன்சிலருமான விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், பழனிச்சாமி, நகரச் செயலாளர் ராஜ்மோகன், வக்கீல் முத்துக்குமாரசாமி, பேரூராட்சி சேர்மன் சேக் சிக்கந்தர் பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-
தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டம் 110 பேருக்கும், பள்ளிகல்வித்துறை விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 301 பேருக்கும், வேளாண்மை துறை விவசாய உபகரணங்கள் மற்றும் இடுபொருள்கள் 24 பேருக்கும், வருவாய் துறை சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி ஒருவருக்கும், உழவர் பாதுகாப்பு அட்டை 400 பேருக்கும், இறப்பு நிவாரணம் 37 பேருக்கும், கல்வி உதவித்தொகை 2 பேருக்கும், திருமண உதவித்தொகை 11 பேருக்கும், ஆதி திராவிடர் நலத்துறை தையல் மிஷின் 2 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் சிறுதொழில் தையல் இயந்திரம் 3 பேருக்கும், ஊரக வளர்ச்சித்துறை தூய்மை காவலர்களுக்கான உபகரணங்கள் 98 பேருக்கும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான டிராக்டர் மற்றும் தள்ளுவண்டிகள் 18 பேருக்கும், ஊராட்சிகளுக்கான கணினிகள் 3, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் பொருள் துறை சார்பில் குடும்ப அட்டை 220 பேருக்கும், சமூகநலத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு திட்ட வைப்பு தொகை பத்திரம் 16 பேருக்கும், மருத்துவத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் 10 பேருக்கும், தொழிலாளர் மாதாந்திர ஓய்வூதியம் 4 பேருக்கும், பொது சுகாதாரத் துறை சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் 342 பேருக்கும், மக்களை தேடி மருத்துவ திட்ட மருந்து பெட்டகம் 10 பேருக்கும் என மொத்தம் 3484 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் தொகை ரூ.8 கோடியே 70 லட்சத்து 26 ஆயிரத்து 399 மதிப்பிலான உதவிகள் வழங்கினார்.
இந்த விழாவில் தி.மு.க. நிர்வாகிகள், குடகிபட்டி ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி, ஆசிரியர் துரை, மதியரசு அயூப்கான், பத்திர எழுத்தர் பாலு, கோசுகுறிச்சி கலிபுல்லா, துவாரபதி மணி, வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






