என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare assistance to differently abled persons"

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்ட றிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்ட றிந்தார்.இதில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கை கள் குறித்து மொத்தம் 491 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

    அவற்றை பரிசீலித்த கலெக்டர், மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி, விரைவாக நடவ டிக்கை எடுக்க அவர்களுக்கு உத்தர விட்டார். அதனைத்தொ டர்ந்து, மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2022-2023-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறந்த 2 ரேஷன் கடை விற்பனையாளர்கள், 2 எடையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத் தளத்தில் மாற்றுத்திறனாளி களை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து, 1 மாற்றுத்தி றனாளிக்கு ரூ.2,780 மதிப்பி லான காதொலி கருவி, 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,750 மதிப்பில் சிபி மடக்கு சக்கர நாற்காலி, 1 மாற்றுத்திறனா ளிக்கு ரூ.6,450 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி என மொத்தம் 3 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.16,980 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் செல்வக்கு மரன், சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×