என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Week Festival Competition"

    • மாணவர்களுக்கு அழைப்பு
    • வேலூர், அமிர்தி பூங்காவில் நடக்கிறது

    வேலூர்:

    தமிழ்நாடு வனத்துறை சார்பாக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் வாரம் வன விலங்கு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி வேலூர் வனக்கோட்டத்தில் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை வனவிலங்கு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளை காலை 7 மணி அளவில் இயற்கை நடைஎன்ற தலைப்பில் நடை போட்டி சத்து வாச்சாரி, தீர்த்தகிரி முருகன் கோவிலில் இருந்து தொடங்க உள்ளது.

    இதில் கலந்து கொள்ள சுற்றுச்சூழல்ஆர்வலர்கள் மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

    இது தொடர்பான பதிவுகள் 9655413566 7904443195 மற்றும் 9952131786 ஆகிய கைபேசி எண்களில் தொடர்புக் கொண்டு பதிவு செய்யலாம்.

    7-ந் தேதி காலை 8 மணியளவில் ஸ்ரீ வெங்க டேஸ்வரா மேல்நிலை பள்ளியில் ஓவிய போட்டி, வினாடி வினாபோட்டி மற்றும் பேச்சு போட்டி கள்முறையே வனவிலங்கு பாதுகாப்பு சுற்றுசூழல், வனம் மற்றும் வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் நமது பங்கு ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற உள்ளது.

    மேலும், அமிர்தி வன உயிரின பூங்காவில் விழிப்புணர்வு முகாம், பள்ளி குழந்தைகள் இலவ சமாக அமிர்தி பூங்காவை பார்வையிடுதல் மற்றும் வன விலங்கு பாதுகாப்பில் நமது பங்கு என்ற தலைப்பில் ஓவிய மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    ×