என் மலர்
நீங்கள் தேடியது "weavers union administrators meeting"
- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
- வர்த்தக கண்காட்சி நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் :
தி.மு.க. மேற்கு மண்டல நெசவாளர் அணி மாவட்ட, மாநகர, தலைவர், துணைத்தலைவர் மற்றும் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நெசவாளர் அணி மாநில தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் சச்சிதானந்தம் வரவேற்றார். மாநில செயலாளர்கள், துணைத்தலைவர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வாழ்த்தி பேசினார். முடிவில் தெற்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் திருப்பூர் தெற்கு, வடக்கு, கோவை தெற்கு, வடக்கு, மாநகர், ஈரோடு வடக்கு, தெற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்தியம், தருமபுரி கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, நாமக்கல் கிழக்கு, மேற்கு, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் கோவை கவுண்டம்பாளையத்தில் வருகிற 20-ந் தேதி கைத்தறி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சியை மக்கள் பயன்பெறும் வகையில் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






