search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water pipeline"

    • 10 புதிய மேல்நிலை தொட்டிகள் கட்டும் பணி ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
    • அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இதில் குடிநீர் விநியோக குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வீணாகி வருகிறது.

    அதனால் குடியிருப்பு இணைப்புகளுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, தற்போது வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 142. 17 கிலோமீட்டர் நீளம் குடிநீர் விநியோக குழாய்கள், 16 ஆயிரத்து 462 வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு புதிய குடிநீர் விநியோக குழாய்கள் அமைக்கும் பணி மற்றும் 10 புதிய மேல்நிலை தொட்டிகள் கட்டும் பணி ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியானது 2023 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டு, 2024 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நகராட்சி அதிகாரிகள் கூறினர்.

    ×