search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water - Mor Pandal"

    • 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு சக்கரை பொங்கல் மற்றும் வாழைப்பழம், பப்பாளி பழம், தர்பூசணி, நீர்மோர் வழங்கினார்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி. அ.சரவணன் செய்திருந்தார்.

    திருப்பூா்:

    மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் இன்று காலை திருப்பூா் பி.என் ரோடு போயம்பாளையம் ஆர்.கே நகர் மின்வாரிய அலுவலக பகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் க. செல்வராஜ் எம்.எல்.்ஏ.,

    திறந்து வைத்து 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு சக்கரை பொங்கல் மற்றும் வாழைப்பழம், பப்பாளி பழம், தர்பூசணி, நீர்மோர் வழங்கினார்.

    அதன் தொடர்ச்சியாக மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன், பாண்டியன் நகர் பகுதி திமுகழக செயலாளர் வே.ஜோதி, மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் துணை தலைவர் ஆர். ரெங்கசாமி, ஹோட்டல் தொமுச பொது செயலாளர் மகேஷ்குமார், 22 வது வார்டு கவுன்சிலர் ராதா கிருஷ்ணன், நிர்வாகி சிவபாலன், உள்ளிட்டவர்கள் நீர்மோர், முககவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி. அ.சரவணன் செய்திருந்தார்.

    ×