என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water levels should be drained"

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • குறை தீர்வு கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் சப்-கலெக்டர் கவிதா தலைமையில் நேற்று நடந்தது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:- வேலூர் மாவட்டத்தில் விவசாயி களுக்கு தட்டுப்பாடு இன்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயி களுக்கு உர தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். மேல் அரசம்பட்டு பகுதியில் உள்ள நீர் நிலைகளை தூர்வார வேண்டும்.

    தோட்டக்கலை துறை சார்பில் தக்காளி, கத்திரிக்காய், மிளகாய், சாமந்தி, மல்லி, சம்பங்கி உள்ளிட்ட பயிர் வகைகளை செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். பள்ளிகள் ரேஷன் கடைகள் ஆஸ்பத்திரிகள் மற்றும் விவசாய நிலங்களில் மது குடித்துவிட்டு பாட்டிலை உடைத்து செல்பவர்கள் மீது காவல்துறையினர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்வதை போல் மது வகைகளை அட்டைப்பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கு பதிலறிந்த சப்-கலெக்டர் கவிதா உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என்றார்.

    ×