search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water drowning"

    புதுவண்ணாரப்பேட்டையில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ். பெயிண்டர். இவரது மனைவி ராதிகா. இவர் களது 3 வயது மகள் மூனேஷி. நேற்று மாலை ராதிகா வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமி மூனேஷி சமையல் அறைக்குள் சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் உள்ள நீரை எடுக்க முயன்றாள். அப்போது தலைகுப்புற தண்ணீருக்குள் விழுந்து விட்டாள்.

    மகளை காணாததால் ராதிகா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டிக்குள் சிறுமி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சிறுமியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    ×