என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Waste treatment plant"

    • நந்தகுமார் எம்.எல்.ஏ. தகவல்
    • வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. இன்று காலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார்.

    பிரசவ வார்டு, அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.

    சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் அப்போது அவர்கள் ஒரு சில குறைகள் குறித்து தெரிவித்தனர்.

    உங்களுடைய குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என நோயாளிகளிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து நந்தகுமார் எம்.எல்.ஏ. கூறியதாவது:- அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கழிவறை வசதி குறைவாக உள்ளதாக நோயாளிகள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் செயல்படாமல் உள்ள கழிவறையை திறந்து நவீன வசதிகளுடன் ஒரு வாரத்திற்குள் செய்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் நோயாளிகள் தங்கும் அறை ரூ.7 லட்சம் மதிப்பில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் கட்டி தரப்படும்.

    ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் சப்தகிரி ஏரியில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    இதனை தடுக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் அந்த நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கி முடிக்கப்படும். தினமும் சுத்திகரிக்கப்படும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் கழிவறைகள் மற்றும் செடிகளுக்கு பயன்படுத்தப்படும்.

    ஆதரவு இல்லாமல் சிகிச்சைக்கு வந்துள்ளவர்களை தன்னார்வலர்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×